செய்திகள்
மதுரை ரெயில் நிலையம்

தண்டவாள பராமரிப்பு பணி- மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

Published On 2020-02-17 10:19 GMT   |   Update On 2020-02-17 10:19 GMT
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை-தாழையூத்து இடையே தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்களின் போக்குவரத்தில் நாளை (18-ந்தேதி) முதல் 29-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627/22628) திங்கள் தவிர மற்ற நாட்களில் இருமார்க்கங்களிலும் கோவில்பட்டி வரை மட்டும் இயங்கும்.

தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16191) திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16192) திங்கள் தவிர மற்ற நாட்களில் நாகர்கோவில்- திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769/ 56770) 18, 20, 21, 22, 25, 27, 28, 29 ஆகிய நாட்களில் சாத்தூர்- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்த ரெயில்கள் வருகிற 19, 23 ஆகிய நாட்களில் மதுரை- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த நாட்களில் மதுரையில் இருந்து பாலக்காடு ரெயில் மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

நெல்லையில் இருந்து தாதர் செல்லும் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 11022) மாலை 3 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு புறப்படும்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56767/ 56768) தூத்துக்குடி- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திருச்செந்தூர்- தூத்துக்குடி பயணிகள் ரெயில் இன்று (17-ந்தேதி) நெல்லை- தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News