செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: திருப்பூரில் மேலும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Published On 2020-01-02 06:03 GMT   |   Update On 2020-01-02 06:03 GMT
திருப்பூர் அருகே மங்கலம் ஆர்.டி நகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:

திருப்பூர் அருகே மங்கலம் ஆர்.டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 38). இவர் மங்கலம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது மகன் முகமது பாயீஸ் (வயது8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக முகமது பாயீஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பெற்றோர் அவரை அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து முகமது பாயீசை அவரது பெற்றோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது பாயீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மங்கலம் பகுதி முழுவதும் சுகாதார பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகள், பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுபோல் சிறுவர், சிறுமிகள் உள்பட மேலும் 9 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News