செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-12-21 06:26 GMT   |   Update On 2019-12-21 06:26 GMT
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 643 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 100 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வழக்கம் போல திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் கடந்த மாதம் 12-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும், சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 40-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News