செய்திகள்
தூத்துக்குடியில் கனமழை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால், சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால், சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.