செய்திகள்
முதுநிலை மருத்துவ மாணவர்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Published On 2019-08-27 05:32 GMT   |   Update On 2019-08-27 05:32 GMT
கோவை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோவை:

தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு இன்றி நேரடியாக பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News