செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

Published On 2019-08-12 04:21 GMT   |   Update On 2019-08-12 04:21 GMT
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அருண்குமார் (வயது 16).

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 5-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தியாகதுருகம் அரசு ஆஸ்பத்திரியில் அருண்குமார் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் 1 வாரம் சிகிச்சை அளித்தனர். அப்போதும் காய்ச்சல் குறையவில்லை. உடனே அவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண்குமாரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

அவர் தீவிர கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், அருண் குமாரின் ரத்தம், சளி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவில் அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News