செய்திகள்
பேஸ்புக் நண்பர் பேசாததால் வாலிபர் தற்கொலை மிரட்டல்- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
புதுவை அரசு ஆஸ்பத்தியில் பேஸ்புக் நண்பர் பேசாததால் வாலிபர் மொட்டை மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்த புரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரும் கடலூரை சேர்ந்த சந்துரு என்ற வாலிபரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாயினர். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசவில்லை.
பலமுறை வினோத் செல்போனில் தொடர்பு கொண்டும் சந்துரு பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்த வினோத் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே வினோத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வினோத் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதனை அறிந்த சந்துரு நேற்று மதியம் வினோத்தை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் வினோத்திடம் பேசாமல் சந்துரு சென்று விட்டார்.
இதனால் சோகம் அடைந்த வினோத் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. எனவே கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக உரத்த குரலில் கத்தினார். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்புக்குள்ளானது.
உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வினோத்திடம் சமாதானம் பேசி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதனை வினோத் ஏற்க மறுத்து நண்பன் என்னிடம் செல்போனில் பேசினால் மட்டுமே கீழே இறங்குவேன் என்று அடம் பிடித்தார்.
ஒருவழியாக போலீசார் சந்துருவின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். பின்னர் வினோத் முன்பு சந்துருவை நிறுத்தி கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு வினோத் என்னிடம் எப்போதும் போல் செல்போனில் பேசுவேன் என்று சந்துரு சத்தியம் செய்து கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என்று மீண்டும் அடம்பிடித்தார்.
இதையடுத்து சந்துரு சத்தியம் செய்து கொடுத்ததால் அதன் பிறகு வினோத் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மீண்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் சந்துருவிடம் கேட்டதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஆள் எடுப்பு வேலைக்காக சென்னை சென்று இருந்ததால் வினோத்திடம் போனில் பேச முடியவில்லை என்று தெரிவித்தார்.
புதுவை அரும்பார்த்த புரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரும் கடலூரை சேர்ந்த சந்துரு என்ற வாலிபரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாயினர். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசவில்லை.
பலமுறை வினோத் செல்போனில் தொடர்பு கொண்டும் சந்துரு பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்த வினோத் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே வினோத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வினோத் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதனை அறிந்த சந்துரு நேற்று மதியம் வினோத்தை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் வினோத்திடம் பேசாமல் சந்துரு சென்று விட்டார்.
இதனால் சோகம் அடைந்த வினோத் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. எனவே கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக உரத்த குரலில் கத்தினார். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்புக்குள்ளானது.
உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வினோத்திடம் சமாதானம் பேசி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதனை வினோத் ஏற்க மறுத்து நண்பன் என்னிடம் செல்போனில் பேசினால் மட்டுமே கீழே இறங்குவேன் என்று அடம் பிடித்தார்.
ஒருவழியாக போலீசார் சந்துருவின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். பின்னர் வினோத் முன்பு சந்துருவை நிறுத்தி கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு வினோத் என்னிடம் எப்போதும் போல் செல்போனில் பேசுவேன் என்று சந்துரு சத்தியம் செய்து கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என்று மீண்டும் அடம்பிடித்தார்.
இதையடுத்து சந்துரு சத்தியம் செய்து கொடுத்ததால் அதன் பிறகு வினோத் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மீண்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் சந்துருவிடம் கேட்டதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஆள் எடுப்பு வேலைக்காக சென்னை சென்று இருந்ததால் வினோத்திடம் போனில் பேச முடியவில்லை என்று தெரிவித்தார்.