செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஓசூர் வருகை

Published On 2018-10-08 07:44 GMT   |   Update On 2018-10-08 07:44 GMT
ஓசூரில் உள்ள அதியமான் கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விண்வெளி வார நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். #GovernorBanwarilalPurohit
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உலக விண்வெளி வாரம் 2018-ஐ முன்னிட்டு, செயற்கைக் கோள் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

விண்வெளி வார நிறைவு விழா, இன்று மாலை 4 மணிக்கு அதியமான் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

கவர்னர் வருகையையொட்டி, ஓசூர் அதியமான் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.மகேஷ்குமார் மேற்பார்வையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #GovernorBanwarilalPurohit
Tags:    

Similar News