செய்திகள்

ஈரோடு அருகே வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

Published On 2018-09-23 11:52 GMT   |   Update On 2018-09-23 11:52 GMT
ஈரோடு அருகே தொட்டியில் பரவி இருந்த வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஈரோடு:

ஈரோடு பெரிய சேமூர் மாமரத்துபாளையம் அருகே கார்த்திக்கேயன் பிரிண்டிங் மில் என்ற ஒரு தனியார் நிறுவனம் உள்ளது.

இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்னீர் (வயது 48), மண்டரி பண்டித் (40) ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மில்லில் உள்ள கெமிக்கல் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தனர்.

அப்போது அந்த தொட்டியில் பரவி இருந்த வி‌ஷ வாயு அவர்களை தாக்கியது. இதில் 2 பேரும் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்து விட்டனர்.

இதற்கிடையே சுத்தம் செய்ய தொட்டியில் இறங்கிய 2 பேர் வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் சுருண்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையொட்டி அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு வி‌ஷ வாயு தாக்கி இறந்து கிடந்த 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வி‌ஷ வாயு தாக்கி பலியான மன்னீருக்கு முகிலாபேகம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதே போல் மண்டரி பண்டித்துக்கு மிம்மியாதேவி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர்.


வி‌ஷ வாயு தாக்கி இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி சத்தி ரோட்டில் திடீரென அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த திருநங்கையிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News