செய்திகள்
இந்து அறநிலையத்துறை ஆணையர் புகார் - விருதுநகர் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு
அவதூறு பேச்சு தொடர்பாக விருதுநகர் போலீசார் எச்.ராஜா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். #HRaja #BJP
விருதுநகர்:
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசினார்.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரிகரன் விருதுநகர் பஜார் போலீசில் இன்று புகார் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்களது குடும்ப பெண்களையும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #HRaja #BJP
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசினார்.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரிகரன் விருதுநகர் பஜார் போலீசில் இன்று புகார் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்களது குடும்ப பெண்களையும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #HRaja #BJP