செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

Published On 2018-08-30 05:58 GMT   |   Update On 2018-08-30 05:58 GMT
மாணவி பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்ட திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர் தங்கபாண்டியன் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர் தங்கபாண்டியன் மாணவியின் பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விசாரணைக்காக போலீசார் தன்னை கைது செய்ய நேரிடும் என்பதால், சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால், பேராசிரியர் தங்க பாண்டியன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஜாமீன் கிடைத்தால், போலீஸ் விசாரணையின்போது நேரில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. பேராசிரியரின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege


Tags:    

Similar News