செய்திகள்

வாளையர் அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 3 பேர் பலி

Published On 2018-04-21 07:17 GMT   |   Update On 2018-04-21 07:17 GMT
வாளையர் அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கோவை மதுக்கரை பிச்சனூர் ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 43). இவரது மகள் அமராவதி (16). பரமசிவத்தின் நண்பர் ராஜீவின் மகள் ரேஷ்மா (14). நேற்று இரவு இவர்கள் 3 பேரும் வாளையார் அணையில் குளிக்க சென்றனர்.

வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அணையில் அவர்களை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது துணிகள் மட்டும் கரையில் இருந்தன.

இது குறித்த வாளையார் போலீசார் மற்றும் கஞ்சிக்கோடு தீயணைப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விளக்கு வெளிச்சத்தில் அணையில் இறங்கி தேடினர். நள்ளிரவு 12 மணி அளவில் 3 பேரும் அணையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர்.

அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News