செய்திகள்

தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு - கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-04-13 19:10 GMT   |   Update On 2018-04-13 19:10 GMT
வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News