செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 2,500 கனஅடியாக குறைப்பு
நீர்மட்டம் 56 அடியாக சரிந்ததால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. நேற்று 162 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 104 கன அடியாக குறைந்தது.
நேற்று 58.02 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.81 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று 2,500 கனஅடியாக குறைந்து திறந்து விடப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் மிக குறைவாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. நேற்று 162 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 104 கன அடியாக குறைந்தது.
நேற்று 58.02 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.81 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று 2,500 கனஅடியாக குறைந்து திறந்து விடப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் மிக குறைவாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.