செய்திகள்
இன்று நினைவு தினம்: பாரதிதாசன் சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி சட்டமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவகொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி சட்டமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவகொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.