செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2017-04-20 04:17 GMT   |   Update On 2017-04-20 04:17 GMT
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 1979-ம் ஆண்டு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 5 யூனிட்கள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலத்தையும் தாண்டி இயங்கி வருகிறது.

இங்குள்ள அனைத்து யூனிட்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதும், இதன் காரணமாக மின் உற்பத்தி தடைபடுவதும், பின்னர் அவை சரி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகை மின் உற்பத்தி காரணமாக 1-வது யூனிட்டில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் அந்த யூனிட் மீண்டும் இயங்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை 3-வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மொத்த உற்பத்தியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனின் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News