செய்திகள்

கோவையில் மணமகளின் தந்தை மயங்கி விழுந்து மரணம்

Published On 2017-04-02 03:47 GMT   |   Update On 2017-04-02 03:47 GMT
கோவையில் இன்று காலை மகள் திருமணத்தில் தந்தை இறந்ததால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
கோவை:

ஈரோட்டை அடுத்த சித்தோடை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). அந்த பகுதியில் கெடிகார கடை வைத்து நடத்தி வந்தார்.

இவரது மகள் விஜிஸ்ரீ (21). இவருக்கும் கோவை குனிய முத்தூரை சேர்ந்த கார்த்தி (26) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இன்று (2-ந் தேதி) காலை திருமணம் நடந்தது.

குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டில் உள்ள திருமணம் மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதற்காக மணமகன், மணமகள் வீட்டை சேர்ந்த உறவினர்கள் ஏராளமானோர் வந்து இருந் தனர்.

காலை 6.30 மணிக்கு மணமகன் கார்த்தி மணமகள் விஜிஸ்ரீயின் கழுத்தில் தாலி கட்டினார்.

அதன் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கண்ணன் தனது மகளை, மணமகன் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக படிக்கட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதில் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் கண்ணனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகள் திருமணத்தில் தந்தை இறந்ததால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Similar News