செய்திகள்

ஓசூரில் ரெயிலை கவிழ்க்க சதி - நக்சலைட்டுகள் நாசவேலையா? அதிகாரிகள்

Published On 2017-03-21 03:22 GMT   |   Update On 2017-03-21 03:22 GMT
ஓசூரில் ரெயில்வே தண்டவாளத்தில் இணைப்புக்கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதை ரெயில்வே ஊழியர் கண்டுபிடித்தார். நக்சலைட்டுகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டனரா? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தளி ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் மற்றும் சிமெண்டு சிலாப்புகளை இணைக்க கூடிய இணைப்புக்கம்பிகள் பல இடங்களில் அகற்றப்பட்டு இருப்பதை ரோந்து சென்ற ரெயில்வே ஊழியர் கண்டுபிடித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் அகற்றப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட இணைப்புக்கம்பிகளை பொருத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரெயிலை கவிழ்க்கும் சதியில் தண்டவாளத்தில் இருந்த இணைப்புக்கம்பிகளை மர்ம நபர்கள் அகற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நக்சலைட்டுகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டனரா? என தென் மேற்கு ரெயில்வே நிர்வாகம் மற்றும் ஓசூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News