செய்திகள்
எல்.கே.அத்வானி இன்று மாலை விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்
ஈஷா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு எல்.கே.அத்வானி இன்று மாலை விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இதற்கிடையே அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது மகள் பிரதீபாவுடன் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் வந்தார். பின்னர் ஈஷா மையத்துக்கு சென்று பார்வையிட்ட அவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து நேற்று 2-வது நாளாகவும் அத்வானி ஈஷா யோகாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இன்று 3-வது நாளாக அவர் ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் ஈஷா மையத்தில் இருந்து அத்வானி கார் மூலம் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.45 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே ஈஷாவில் இருந்து அத்வானி செல்லும் வழியான பேரூர், மதுக்கரை, சுகுணாபுரம், சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது மகள் பிரதீபாவுடன் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் வந்தார். பின்னர் ஈஷா மையத்துக்கு சென்று பார்வையிட்ட அவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து நேற்று 2-வது நாளாகவும் அத்வானி ஈஷா யோகாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இன்று 3-வது நாளாக அவர் ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் ஈஷா மையத்தில் இருந்து அத்வானி கார் மூலம் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.45 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே ஈஷாவில் இருந்து அத்வானி செல்லும் வழியான பேரூர், மதுக்கரை, சுகுணாபுரம், சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.