செய்திகள்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் இறந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது66). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு வார்டில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் லட்சுமி இறந்தார்.
ஏற்கனவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலியாகினர். இன்று லட்சுமி இறந்ததன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது66). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு வார்டில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் லட்சுமி இறந்தார்.
ஏற்கனவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலியாகினர். இன்று லட்சுமி இறந்ததன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.