செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு

Published On 2017-02-09 11:49 GMT   |   Update On 2017-02-09 11:49 GMT
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்-அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி வகித்தவர். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். என்னை போல் மாநகராட்சி 100 வார்டுகளிலும் உள்ள வார்டு, பகுதி செயலாளர்களும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

பன்னீர்செல்வம் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கடத்தி வைத்திருப்பது ஜனநாயக விரோத போக்கு ஆகும். அவர்களை சட்டப்படி மீட்டு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News