செய்திகள்

மதுரையில் போலீஸ்காரர்களின் தாய் கழுத்தை அறுத்து கொலை

Published On 2016-12-08 10:11 GMT   |   Update On 2016-12-08 10:11 GMT
மதுரையில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர்களின் தாய் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). இவர்களது 2 மகன்கள் போலீஸ்காரர்களாக உள்ளனர். ராஜலட்சுமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

அதன்படி ராஜலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில கோழிக்கறி கடையில் வேலைபார்த்து வந்த கணேசன் (வயது25) என்பவருக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்தாக கூறப்படுகிறது.

பணம் பெற்றுக்கொண்ட அவர் பின்னர் அதற்கான வட்டியை கொடுக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் விரோதம் இருந்து வந்தது. மேலும் ராஜலட்சுமி அசலுடன், வட்டியை கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ராஜலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்து கொண்ட கணேசன், அவர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ராஜலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் ராஜலட்சுமி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல்அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ராஜலட்சுமியை கொலை செய்த கணேசன் மதிச்சியம் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News