செய்திகள்

ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் கொள்ளை: 20 பேர் கைது

Published On 2016-12-07 07:54 GMT   |   Update On 2016-12-07 07:54 GMT
டாஸ்மாக் கடையில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை கொள்ளையடித்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொன்னேரி:

பழவேற்காடு பஜார் வீதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. கடந்த 5-ந் தேதி மாலை மர்ம கும்பல் மதுக்கடையை மூடும்படி திரண்டு வந்தனர்.

அவர்கள் திடீரென கடை ஊழியர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமுர்த்தி ஆகியோரை தாக்கி உள்ளே புகுந்தனர். மதுக்கடையை சூறையாடி அங்கிருந்த சுமார் 1¼ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து திருப்பாலை வனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை சூறையாடியதாக சாத்தாங்குப்பத்தை சேர்ந்த அருள், தேசப்பன், நடுவூர் மாங்குப்பம் கிளாட்வின், தங்கராஜ் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News