செய்திகள்
கமுதியில் தபால் ஊழியர் வீட்டில் 34½ பவுன் நகை கொள்ளை
தபால் ஊழியர் வீட்டில் 34½ பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது54). இவர் கமுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார்.
நேற்று காலை 8 மணிக்கு இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவரது மனைவி மேனகா, தோட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது வீட்டின் கதவை பூட்டி, சாவியை அங்கேயே ஒரு இடத்தில் வைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னர் மதியம் வீடு திரும்பிய அவர் பீரோவில் இருந்த 34½ பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த துணிகர கொள்ளை குறித்து மண்டல மாணிக்கம் போலீசில் கருணாநிதி புகார் செய்தார். கமுதி இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தடயவியல் நிபுணர் களும் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் பின்னர் திரும்பி வந்துவிட்டது. எனவே வீட்டின் சாவியை மேனகா வைத்து செல்வதை நோட்ட மிட்ட மர்ம மனிதர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது54). இவர் கமுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார்.
நேற்று காலை 8 மணிக்கு இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவரது மனைவி மேனகா, தோட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது வீட்டின் கதவை பூட்டி, சாவியை அங்கேயே ஒரு இடத்தில் வைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னர் மதியம் வீடு திரும்பிய அவர் பீரோவில் இருந்த 34½ பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த துணிகர கொள்ளை குறித்து மண்டல மாணிக்கம் போலீசில் கருணாநிதி புகார் செய்தார். கமுதி இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தடயவியல் நிபுணர் களும் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் பின்னர் திரும்பி வந்துவிட்டது. எனவே வீட்டின் சாவியை மேனகா வைத்து செல்வதை நோட்ட மிட்ட மர்ம மனிதர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.