செய்திகள்

வெப்ப சலனத்தால் தென்மாவட்டங்களில் மழை பெய்யும்

Published On 2016-10-22 07:10 GMT   |   Update On 2016-10-22 09:06 GMT
வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழையும் எதிர் பார்க்கலாம்.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத் தில் அதிகபட்சமாக சோழவந்தானில் 10 செ.மீ பெய்துள்ளது. உசிலம்பட்டி-8, வாழப் பட்டி-7, நிலக்கோட்டை, திருமங்கலம் தலா 5 செ.மீ, மணி யாச்சி, நத்தம், பெரிய குளம், தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News