வாணியம்பாடி அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
வாணியம்பாடி, செப்.28-
வாணியம்பாடி போலீஸ் ஏட்டு வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று இரவு ராஜேந்திரன் பணிக்கு சென்று விட்டார் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளை கும்பல் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை ரூ.7 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை வீடு திரும்பிய ராஜேந்திரன் கொள்ளை நடந்திருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை சேகரிக்கபட்டது.
கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணிக்கு சென்ற போலீஸ் ஏட்டு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.