செய்திகள்
தற்கொலைக்கு முயன்ற ரஜினிரவி

மனைவிக்கு சீட் கிடைக்காததால் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை முயற்சி

Published On 2016-09-27 07:06 GMT   |   Update On 2016-09-27 07:06 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனைவிக்கு சீட் கிடைக்காத சோகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த குப்பம்மாசத்திரத்தை சேர்ந்தவர் ரஜினிரவி. அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி தமிழ்ச் செல்வி. திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

இவர் மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை.

இதனால் ரஜினிரவி மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு மனைவி தமிழ்ச்செல்வி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரஜினிரவி திடீரென தனது கையை கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் கணவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரஜினிரவிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனைவிக்கு சீட் கிடைக்காத சோகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News