செய்திகள்

ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம்

Published On 2016-06-14 06:45 GMT   |   Update On 2016-06-14 06:45 GMT
ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 4 பெண்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி மாரியம்மன் பண்டிகை கடந்த வாரம் நடைபெற்றது.

இதையடுத்து செம்மாண்டப்பட்டி அருகே உள்ள ஏனாதி காலனி என்ற இடத்தில் அந்த பகுதி இளைஞர்கள் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஊரின் நடுவில் உள்ள மந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான்கு பெண்கள் ஒரு ஆண் என பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடியவர்கள் நேரம் ஆக ஆக 12 மணிக்கு மேல் உடலில் துணிகளை அவிழ்த்து விட்டு நிர்வாண நடனம் ஆடியதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கிருந்த சிலர் ஓமலூர் காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கூறினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசாரின் ஜீப்பை நிறுத்திவிட்டு பார்த்த போது அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர்.

அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர். நிர்வாண நடனம் ஆடிக் கொண்டிருந்த 4 பெண்களும் தங்களின் துணிகளை எடுக்காமல் காட்டுப் பகுதியில் ஓடிவிட்டனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத போலீசார் பல வீடுகளில் தேடியபோது இருட்டை பயன்படுத்தி அங்குள்ள இளைஞர்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். இரவு நேரம் என்பதால் கற்கள் வீசியவர்கள் யார் என தெரியாமல் இருந்த போலீசார் அங்கிருந்த மைக்செட், நிர்வாண நடன அழகிகளின் துணி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தற்போது ஆடை குறைப்பு என கூறி ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாருக்கு தெரியாமல் நிர்வாண நடனம் நடத்தி அங்கு சென்ற போலீசார் மீது கல் வீசிய சம்பவம் ஓமலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News