செய்திகள்
புனே வீரரை மடக்கிப்பிடிக்கும் மும்பை அணியினர்

புரோ கபடி - புனே, மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

Published On 2019-09-05 15:47 GMT   |   Update On 2019-09-05 15:47 GMT
பெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பால்டன், யு மும்பா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
பெங்களூரு:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை எடுத்து வந்தன. முதல் பாதி முடிவில் யு மும்பா அணி 16 - 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் புனேரி பால்டன் சிறப்பாக ஆடியது.

இறுதியில், இரு அணிகளும் 33 - 33 என்ற புள்ளிகள் எடுக்க சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி ஆறம் இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News