செய்திகள்
ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருக்கும் ரெய்னா

சுரேஷ் ரெய்னாவுக்கு மூட்டு ஆபரேஷன்: 6 வாரங்கள் ஓய்வு

Published On 2019-08-10 14:06 GMT   |   Update On 2019-08-10 14:06 GMT
காயம் காரணமாக மூட்டு ஆபரேஷன் செய்துகொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 6 வாரங்கள் ஓய்வில் இருப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமானவர் சுரேஷ் ரெய்னா. உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ரெய்னா கடந்த சில மாதங்களாக முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக நெதர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவுக்கு மூட்டு ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு மூட்டு ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News