செய்திகள்

மலேசியா ஓபன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Published On 2019-04-03 13:27 GMT   |   Update On 2019-04-03 13:27 GMT
மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #SainaNehwal
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்டார்.

இதில் செட்டை சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் 22-20 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 15-21 எனவும், 3-வது செட்டை 10-21 எனவும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் மற்றும் பிவி சிந்து ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Tags:    

Similar News