செய்திகள்

அப்பாடா, பார்முக்கு வந்தார் ஆரோன் பிஞ்ச்: ராஞ்சி போட்டியில் அரைசதம் அடித்தார்

Published On 2019-03-08 09:39 GMT   |   Update On 2019-03-08 09:39 GMT
பார்ம் இன்றி தவித்து வந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ராஞ்சி போட்டியில் அரைசதம் அடித்தார். #INDvAUS
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். இவர் கடந்த வரும் ஜூலை மாதம் 172 ரன்கள் குவித்தார். அதன்பின் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. 22 இன்னிங்சில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடினார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இழந்த பார்ம்-ஐ மீண்டும் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News