செய்திகள்
பெண்கள் டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இந்தியாவை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. #INDWvENGW
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 35 ரன்களும், டாமி பியூமோன்ட் 62 ரன்களும் விளாசினர். கேப்டன் நைட் 20 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முதல் நான்கு வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. வேத கிருஷ்ண மூர்த்தி 15 ரன்களும், தீப்தி ஷர்மா 22 ரன்களும், ஷிகா பாண்டே 23 ரன்களும் அடக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முதல் நான்கு வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. வேத கிருஷ்ண மூர்த்தி 15 ரன்களும், தீப்தி ஷர்மா 22 ரன்களும், ஷிகா பாண்டே 23 ரன்களும் அடக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.