செய்திகள்

திருவனந்தபுரத்தில் முதல் ஒருநாள் போட்டி

Published On 2018-10-31 06:19 GMT   |   Update On 2018-10-31 09:14 GMT
திருவனந்தபுரத்தில் முதல் முறையாக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றனர். #INDvWI #MSDhoni #ViratKohli #GreenfieldStadium
திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் முதல் முறையாக ஒருநாள் போட்டி நடக்கிறது. இங்கு ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த போட்டியில் இந்தியா 6 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தியது.



இந்தியாவில் ஒரு நாள் போட்டி நடைபெறும் 47-வது மைதானமாகும். புதிய ஸ்டேடியத்தில் இந்திய அணி 43 போட்டியில் 23-ல் வெற்றி பெற்றுள்ளது.

நாளைய போட்டியில் விராட்கோலி ‘டாஸ்’ வென்றால் 5 ஆட்டத்திலும் டாஸ் வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார். அசாருதீன், டிராவிட், டோனி ஆகியோர் ஒரு தொடரில் 5 ஆட்டத்திலும் ‘டாஸ்’ வென்று இருந்தனர்.

டோனி ஒரு ரன் எடுத்தால் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்னை தொடுவார். விராட் கோலி ஏற்கனவே 10 ஆயிரம் ரன்னை தொட்டுவிட்டார். 281 இன்னிங்சில் 10,173 ரன் எடுத்து உள்ளார். ஆசிய அணிக்காக 174 ரன்களை எடுத்துள்ளார்.

டோனி 51 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆயிரம் ரன்னை தொடுவார். புவனேஷ்குமார் 2 விக்கெட் எடுத்தால் 100 விக்கெட்டை தொடுவார். #INDvWI #MSDhoni #ViratKohli #GreenfieldStadium
Tags:    

Similar News