செய்திகள்

ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர் டீ விற்கிறார்

Published On 2018-09-07 06:40 GMT   |   Update On 2018-09-07 06:40 GMT
இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் சிபாக் தக்ராவ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் ஹரீஸ்குமார் குடும்பத்தை காப்பாற்ற டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். #HarishKumar #AsianGames
இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் சிபாக் தக்ராவ் (கால்களால் பந்தை அடிப்பது) போட்டியில் ஆண்கள் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.



இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹரீஸ்குமார் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற தந்தையின் டீ கடையில் வேலை செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது , “எங்கள் குடும்பம் மிக பெரியது. வருமானம் குறைவாக இருப்பதால் குடும்பத்தை காப்பாற்ற டீ கடையில் வேலை பார்த்து வருகிறேன். தினமும் 4 மணி நேரம் எனது விளையாட்டு பயிற்சிக்காக ஒதுக்கிறேன். குடும்பத்தை காப்பற்ற நல்ல வேலை பெறுவதே எனது எதிர்கால திட்டம். தொடர்ந்து பயிற்சி எடுத்து நாட்டிற்காக இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும்”என்றார். #HarishKumar #AsianGames
Tags:    

Similar News