செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி- செபக் டக்ரா போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்

Published On 2018-08-21 10:12 GMT   |   Update On 2018-08-21 10:12 GMT
ஆசிய விளையாட்டு போட்டி ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-2 என தோல்வியைத் தழுவியது.

என்றாலும் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். அதன்படி இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.



இந்த பதக்கம் மூலம் இந்தியா தலா மூன்று தங்கம், வெள்ளி, வெண்கலத்துடன் 9 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News