செய்திகள்

தல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் - ஹர்பஜன் சிங்

Published On 2018-05-20 19:47 GMT   |   Update On 2018-05-20 19:47 GMT
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvKXIP #HarbhajanSingh

புனே:

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: “எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் @ChennaiIPL #கற்றவை”.



இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvKXIP #HarbhajanSingh
Tags:    

Similar News