செய்திகள்

சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு 4 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய சச்சின்

Published On 2018-05-15 11:38 GMT   |   Update On 2018-05-15 11:38 GMT
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு 4 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.#SachinTendulkar #wheelchaircricketteam
புதுடெல்லி:

இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணியின் தலைமை செயலாளர்  பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிக்கு 4 லட்சம் ரூபாய் பேட்டியளித்தாக தெரிவித்தார்.

சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு  பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுவதாக சச்சினுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுகல்கரின் அலுவலக அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டனர். அடுத்த மூன்று நாட்களில் 4.39 லட்சம் ரூபாயை சச்சின் நன்கொடையாக வழங்கினார்.

சச்சின் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த பிரதீப், ஆசிய கோப்பை போட்டியில் சக்கரநாற்காலி அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். #SachinTendulkar  #wheelchaircricketteam

 
Tags:    

Similar News