செய்திகள்

வில்வித்தையில் சென்னை மாணவர்கள் சாதனை- 15 நிமிடம் 15 நொடியில் 3232 அம்புகளை எய்தனர்

Published On 2018-05-04 10:17 GMT   |   Update On 2018-05-04 10:17 GMT
சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் வரும் மாணவர்கள் 15 நிமிடம் 15 நொடியில் 3232 வில் அம்புகளை எய்தி சாதனைப் படைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஜேஜே உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 29-ந்தேதி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு வில்வித்தை சாதனைக்கான போட்டி நடைபெற்றது.

இதில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்கே சாய்ஸ்ரீ கார்த்திக் (4-ம் வகுப்பு), ஸ்ரீ சந்தானபாலன் (யூகேஜி) ஆகியோர் கலந்து கொண்டு 15 நிமிடம் 15 நொடியில் தொடர்ந்து 3232 வில் அம்புகளை எய்து புதிய உலக சாதனைப் படைத்தார்கள்.



சாதனைப் புரிந்த மாணவர்களை மெட்ரிக் பள்ளி இணை இயக்குநர் டாக்டர் சி.உஷாராணி பாராட்டினார்.
Tags:    

Similar News