செய்திகள்

மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

Published On 2018-05-03 13:09 GMT   |   Update On 2018-05-03 13:09 GMT
டென்னிஸ் ஜாம்பவான் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மாட்ரிட் ஓபனில் இருந்து விலகியுள்ளார். #MadridOpen #SerenaWilliams
கிராண்ட் ஸ்லாம் பதக்கங்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இந்த மாதத்தின் இறுதியில் தொடங்குகிறது. பிரெஞ்ச் ஓபன் மட்டும் செம்மண் தரையில் நடைபெறும். இந்த தொடருக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தயாராகும் வகையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் முன்னணி ஓபன் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த வாரம் மாட்ரிட் ஓபன் தொடர் தொடங்குகிறது. இதில் செரீனா வில்லியம்ஸ் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அவர் விலகியுள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். செரீனா வில்லியம்ஸிற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்குழந்தை பிறந்தது. அதன்பின் அவர் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார். இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

டென்னிஸ் போட்டிக்கு தயாராக இன்னும் கடினமாக பயிற்சி தேவை. அதனால்தான் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News