செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

Published On 2018-04-21 12:28 GMT   |   Update On 2018-04-21 14:02 GMT
கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா. #KKRvKXIP
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் சுனில் நரைன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அடுத்து வந்த ராபின் உத்தப்பா 23 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 41 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 28 பந்தில் 43 ரன்கள் சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
Tags:    

Similar News