செய்திகள்

ஒரேயொரு மாற்றத்துடன் இந்தியா பவுலிங்- தென்ஆப்பிரிக்கா அணியில் 4 மாற்றம்

Published On 2018-02-16 11:03 GMT   |   Update On 2018-02-16 11:03 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்து. தென்ஆப்பிரிக்கா 4 மாற்றங்களை செய்துள்ளது. #SAvIND
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் இந்தியா 4-1 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.



இந்நிலையில் 6-வது மற்றும் கடைசி போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.



ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #SAvIND #INDvSA
Tags:    

Similar News