செய்திகள்

புரோ கபடியில் 2-வது தகுதி சுற்று: பெங்கால்-பாட்னா அணிகள் இன்று மோதல்

Published On 2017-10-26 03:23 GMT   |   Update On 2017-10-26 03:23 GMT
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
சென்னை:

5-வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் வெற்றி காணும் அணி இதே மைதானத்தில் 28-ந்தேதி நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதும். இந்த சீசனில் பாட்னாவும், பெங்காலும் நேருக்கு மோதிய 3 ஆட்டங்களில் ஒன்றில் பெங்கால் வெற்றி கண்டது. மற்ற இரு ஆட்டங்களும் சமனில் முடிந்தன. இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News