செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் பிரணாய் தோல்வி

Published On 2017-09-22 08:41 GMT   |   Update On 2017-09-22 08:41 GMT
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் காலி இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங்விடம் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டொக்கியோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங்வ மோதினார். அதில் பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்லி சோயரா- சிக்கிரெட்டி ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஜோடி கால் இறுதியில் தென் கொரியாவின் சே செயுங்- கிம்ஹானா ஜோடியை 21-18, 9- 21, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
Tags:    

Similar News