செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஸ்குவாஷில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து அபாரம்

Published On 2017-05-22 03:41 GMT   |   Update On 2017-05-22 03:41 GMT
பிலிப்பைன்சில் நடந்து வரும் மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நேற்றையத இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து, மலேசியாவின் முகமது சயபிக் கமாலை நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார்.
மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி பிலிப்பைன்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து, மலேசியாவின் முகமது சயபிக் கமாலை எதிர்கொண்டார்.

முதல் புள்ளியில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர்பால் சந்து 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார். கடந்த வாரம் மலேசிய போட்டியில் வாகை சூடிய ஹரிந்தர் தொடர்ச்சியாக 2-வது கோப்பையை வென்று இருக்கிறார்.
Tags:    

Similar News