செய்திகள்
குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் புதிய தேசிய சாதனை
சீனாவில் நடந்து வரும் ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.
ஜின்ஹூ :
ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.
2015-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.
2015-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார்.