செய்திகள்

தியோதர் கோப்பை கிரிக்கெட்: ரோகித்சர்மா திடீர் விலகல்

Published On 2017-03-24 08:01 GMT   |   Update On 2017-03-24 08:01 GMT
நாளை தொடங்கும் தியோதர் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய புளு அணியின் கேப்டன் ரோகித்சர்மா விலகி உள்ளார்.


தியோதர் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கு கிறது. இதில் இந்திய புளு அணிக்கு கேப்டனாக நியமிக்கப் பட்ட ரோகித்சர்மா சிறிய முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் இந்திய புளூ அணிக்கு ஹர்பஜன்சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் இந்திய ரெட் அணியில் இருந்த கேதர் யாதவ் வயிறு கோளாறு காரணமாக விலகி உள்ளார்.

Similar News