செய்திகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

Published On 2017-02-27 03:09 GMT   |   Update On 2017-02-27 03:09 GMT
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.
புதுடெல்லி :

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய நாளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்பூத் தகுதி சுற்றில் 1159 புள்ளிகள் குவித்து 8 பேரில் ஒருவராக இறுதிசுற்றை எட்டினார்.

ஆனால் இறுதிப்போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து 5-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்ற இந்தியர்கள் செயின் சிங் 9-வது இடத்துக்கும், சத்யேந்திர சிங் 13-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இந்தியாவின் ஹீனா சித்து தகுதி சுற்றோடு வெளியேறினார். 0.1 புள்ளி வித்தியாசத்தில் இறுதிசுற்று வாய்ப்பை இழந்த அவர் 11-வது இடத்துக்கு பின்தங்கினார்.

பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம் (5 தங்கம், 4 வெள்ளி) வகிக்கிறது. இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.

Similar News