செய்திகள்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 220-க்குள் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்

Published On 2017-01-15 09:12 GMT   |   Update On 2017-01-15 09:12 GMT
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 220 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி, சேஸிங் நோக்கி சென்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கவாஜா (17), வார்னர் (16) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற ஆஸ்திரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர் 3 விக்கெட்டும், ஜுனைத் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹபீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Similar News