செய்திகள்
சென்னையில் பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டி
சென்னையில் கொடிகான் சித்தோரியூ கராத்தே பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் இடையே கராத்தே போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை:
கொடிகான் சித்தோரியூ கராத்தே பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் இடையே கராத்தே போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டி ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ். நிதி பள்ளியில் நாளை நடக்கிறது. சென்னையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 450 மாணவ- மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
50 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார். தொழில் அதிபர் அழகு செல்வன் பாலா தலைமை தாங்குகிறார். மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு இயக்குனர் எம்.கனகராஜ் தெரிவித்தார்.
கொடிகான் சித்தோரியூ கராத்தே பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் இடையே கராத்தே போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டி ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ். நிதி பள்ளியில் நாளை நடக்கிறது. சென்னையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 450 மாணவ- மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
50 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார். தொழில் அதிபர் அழகு செல்வன் பாலா தலைமை தாங்குகிறார். மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு இயக்குனர் எம்.கனகராஜ் தெரிவித்தார்.